இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
கடந்த சில நாட்களுக்கு முன் தொழிலதிபர் முகேஷ் அம்பானி நடத்திய விநாயகர் சதுர்த்தி விழாவில் சந்தித்து கொண்ட நடிகர்கள் சஞ்சய் தத்தும், சல்மான் கானும் கட்டித் தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். இது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. சஞ்சய் தத், சல்மான் கான் இடையே இருந்த சண்டை முடிவுக்கு வந்து விட்டதாகவும் தகவல்கள் பரவியது.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட சஞ்சய் தத்திடம், சல்மானுடன் சமாதானம் ஆகிய விட்டீர்களா என கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த சஞ்சய் தத், அது சமாதானம் அல்ல. சல்மான் எப்போதும் எனது சகோதரர் போன்றவர். எனக்கு அவரை பிடிக்கும். நாங்கள் இருவரம் நடிகர்கள். இருவருமே எங்களின் வேலைகளில் பிஸியாக இருக்கிறோம். ஆனால் சிலர், எதற்காக எங்களுக்குள் உறவு சரியில்லை என கிளப்பி விடுகிறார்கள் என எனக்கு தெரியவில்லை.
அவரும் என்னை தினமும் சந்திக்க முடியாது. நானும் அவரை தினமும் சந்திக்க முடியாது. ஆனால் எங்களுக்குள் ஒருவர் மீது மற்றொருவருக்கு அன்பும், மரியாதையும் எப்போதும் உண்டு. அப்படி இருக்கையில் சமாதானம் ஆவதற்கு இதில் ஒன்றுமே இல்லை. அன்று விழாவிற்கு சென்ற போது அவர் அங்கிருந்தார். நானும் அங்கு சென்றேன். அது நடு சாலை. நாங்கள் சந்தித்து கொண்டோம். சந்திக்கும் சூழல் ஏற்பட்டதால் கட்டி அணைத்துக் கொண்டோம். அவருக்கும் எனக்கும் எப்போதும் சண்டையும் இல்லை. அதனால் சமாதானமும் இல்லை என்றார்.
சஞ்சய் தத் தற்போது தனது அடுத்த படமான பூமி படத்தின் புரோமோஷன் வேலைகளை கவனித்து வருகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 22 ம் தேதி ரிலீசாக உள்ளது.