ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
நடிகை கங்கணா ரனாவத், அடுத்தடுத்து வீசும் அணுகுண்டுகளால், ஒட்டுமொத்த பாலிவுட்டும் பரபரத்துக் கிடக்கிறது.
வழக்கமாக, சக நடிகர் ஹிருத்திக் ரோஷனைத் தான், அவர், போட்டு தாக்குவார். இந்த முறை, கங்கணாவிடம் சிக்கியது, மூத்த நடிகர் ஆதித்ய பஞ்சோலி. இவரைப் பற்றி, ஒரு பேட்டியில், கங்கணா கூறுகையில், 'ஆதித்ய பஞ்சோலியை, என் தந்தையை போல் நினைத்து, ஒரு உதவி கேட்டேன். ஆனால், அவர், கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் வைத்து இருப்பது போல் அடைத்து வைத்திருந்தார். எனக்கு பாலியல் தொல்லையும் கொடுத்தார்' என, எகிறி அடித்துள்ளார்.
இதைக்கேட்டு ஆடிப்போன, ஆதித்ய பஞ்சோலி, 'அந்த பெண்ணுக்கு கிறுக்கு பிடித்துவிட்டது. நல்ல மன நல டாக்டரிடம் காட்ட வேண்டும். அவர் மீது, கோர்ட்டில் வழக்கு தொடருவேன்' என, பதிலுக்கு பாய்ந்துள்ளார். கங்கணாவின் அதிரடி புகார்களால், கலகலத்துள்ள பாலிவுட் நடிகர்கள், 'அடுத்த அணுகுண்டை யார் மீது வீசுவாரோ...' என, பீதியுடன் உள்ளனர்.