மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
சட்ட விரோதமாக, அனுமதியின்றி கட்டப்பட்ட, பிரபல பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்சியின் பங்களாவை, மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர்.
பிரபல பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்சி, 49; லகே ரஹோ முன்னாபாய், முன்னாபாய் எம்.பி.பி.எஸ்., உட்பட, பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து உள்ளார். மும்பை வெர்சோவா பகுதியில், ஏர் - இந்தியா நிறுவன ஊழியர் ஒருவரிடமிருந்து, ஒரு பங்களாவை சமீபத்தில், வார்சி வாங்கினார். இந்த பங்களாவை புதுப்பிக்க முடிவு செய்தார். அப்போது, மாநகராட்சியின் அனுமதியின்றி, விரிவுபடுத்தி கட்டினார். இது குறித்து, ஏர் - இந்தியா கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், மும்பை மாநகராட்சியில் புகார் செய்தது.
இது பற்றி விசாரித்த மாநகராட்சி நிர்வாகம், அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை இடிக்க முடிவு செய்தது. வார்சியின் பங்களாவை இடிக்க, புல்டோசருடன், அதிகாரிகள் சென்றனர்; ஆனால், வீட்டில் யாரும் இல்லை; வீடும் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தின் ஒரு பகுதியை, அதிகாரிகள் இடித்தனர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், வீட்டில், நடிகர் வார்சி இல்லாததால், ஒரு பகுதியை மட்டும் இடித்தோம். மற்ற பகுதிகள், விரைவில் இடிக்கப்படும் என்றார்.