ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆலியா பட். சில தினங்களுக்கு முன்னர் இவர், அமிஷ் திரிபாதி எழுதியுள்ள சீதா - வாரியர் ஆப் மிதிலா புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய ஆலியா பட், தனக்கு சீதா வேடத்தில் நடிக்க ஆசை என்றார்.
இதுகுறித்து ஆலியா பட் மேலும் கூறியிருப்பதாவது... "இந்த புத்தகத்தை யாராவது படமாக இயக்கினால், அதில் நான் சீதா வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். சீதாவை பற்றி அறிந்திராத பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்திய புராணங்களில் ராமாயணம் முக்கியமானது. அப்படிப்பட்ட ராமாயணத்தை மக்கள் திரையில் கண்டால் நிச்சயம் ரசிப்பார்கள். சீதா ஒரு நல்ல அரசியாகவும், பாதுகாவலராகவும் இருந்தார்" என்றார்.
ஆலியா பட் அடுத்தப்படியாக ரன்பீர் கபூர் நடிக்க உள்ள டிராகன் படத்தில் நடிக்க இருக்கிறார்.