ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய். தமிழ்நாட்டை சுனாமி தாக்கியபோது ஓடோடி வந்து உதவி செய்த முதல் பாலிவுட் நடிகர். அதேபோன்று தற்போது சமீபத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் துப்பாக்கி சண்டையில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 25 வீடுகள் வழங்கி உள்ளார்.
விவேக் ஓபராய், ஓபராய் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மகாராஷ்டிராவில் நடத்தி வருகிறார், இந்த நிறுவனத்தின் சார்பில் விற்பனைக்காக கட்டப்பட்டு வரும் வீடுகளிலிருந்து 25 வீடுகளை வழங்கி உள்ளார்.
சட்டீஷ்கர் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த சம்பவத்தில் உயிர் தியாகம் செய்த 4 எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக வீடுகள் வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 21 வீடுகள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு வீடும் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை விலை உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.