ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக வெளியான 'பாகுபலி-2' படத்திற்கு இங்கு மட்டுமல்லாமல் படம் திரையிடப்பட்ட உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள ரசிகர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்த பாராட்டுக்களையும் படத்தை பற்றி செவி வழி செய்தியாக கேள்விப்பட்ட விஷயங்களையும் கவனித்த பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தப்படத்தை பார்ப்பதற்கு ஆவலாக இருக்கின்றனராம். பாகிஸ்தானில் இந்தப்படத்தை திரையிடுமாறு பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காரணம் பாகுபலி-2'வின் இந்தி பதிப்பை வாங்கி வெளியிட்டவர் கரண் ஜோஹர் தான்.. ஆனாலும் பாகிஸ்தான் ரசிகர்களின் கோரிக்கையை கண்டும் காணதது போல தனது வேலைகளை கவனித்து வருகிறாராம் கரண் ஜோஹர்.. அதற்கு காரணமும் இருக்கவே செய்கிறது.. இதற்கு முன் தன்னுடைய 'ஏ தில் ஹே முஹில்' படத்தில் நடிப்பதற்காக பாகிஸ்தானிய நடிகர் ஒருவரை அழைத்துவந்தபோது அவருக்கு மும்பை அரசியல் கட்சிகளிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்பை இன்னும் அவர் மறக்கவில்லையாம். அதனால் தான் 'பாகுபலி-2'வை பாகிஸ்தானில் ரிலீஸ் செய்வது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறாராம் கரன் ஜோஹர்.