ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்தியாவின் குயில் என்று அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். மறைந்த தனது அப்பா தீனாநாத் மங்கேஷ்கர் நினைவாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்கள், சாதனையாளர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறார். இந்த ஆண்டும் மும்பையில் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். பாலிவுட் நடிகர் ஆமீர்கான், இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், நடிகை வைஜயந்தி மாலா பாலி ஆகியோருக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டது.
கடந்த 16 ஆண்டுகளாக எந்த பொது மேடையிலும் எந்த விருதையும் பெற்றுக் கொள்ளாதவர் ஆமீர்கான். அரசு தவிர்த்த விருதுகளில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவந்தார். லதா மங்கேஷகருக்கு மதிப்பளித்து இந்த விழாவில் கலந்து கொண்டு தீனாநாத் மங்கேஷ்கர் விருதை பெற்றுக் கொண்டார். அவருக்கு விருதை வழங்கியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத்.