ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டில் பிரபல நடிகராக திகழ்பவர் சஞ்சய் தத். மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக சிறை சென்றார். சிறையில் சஞ்சய் தத் இருந்தபோது அவர் பாடல்கள் எழுதினார். தற்போது அந்தப்பாடலை அவர் நடிக்கவிருக்கும் படத்தில் பயன்படுத்த இருக்கிறார்கள். சஞ்சய் தத், பூமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ‛டொர்பாஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். ஆப்கானிஸ்தான் பின்னணியில் த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. ஆப்கனில், சிறுவர்கள் எப்படி தற்கொலை படையாக மாறுகிறார்கள் என்கிற கோணத்தில் இப்படம் உருவாக இருக்கிறது. இதில் சஞ்சய், ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் தான் சஞ்யச் தத் எழுதிய சிறைப்பாடல்களை பயன்படுத்த உள்ளனர். பூமி படப்பிடிப்பை முடித்ததும் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ளன. இப்படத்தை கிரிஷ் மாலிக் இயக்குகிறார்.