ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வருண் தவான் - ஆலியா பட் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் ‛பத்ரிநாத் கி துல்ஹனியா'. சாசாங் கைத்தான் இயக்கத்தில் வெளியான இப்படம் ‛ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா' படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. தற்போது வரை சுமார் 75 கோடி வசூலாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் ‛துல்ஹனியா' படத்தின் மூன்றாம் பாகமும் உருவாகும் என இயக்குநர் சாசாங் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சாசாங், இதுப்பற்றி கூறியதாவது... ‛‛பத்ரிநாத் கி துல்ஹனியா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது, நிறையபேர் பாராட்டி வருகிறார்கள். இந்த பாராட்டு ‛துல்ஹனியா' படங்களின் வரிசையில் மூன்றாம் பாகத்தை எடுக்க ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிச்சயம் மூன்றாம் பாகத்தை இயக்குவேன், ஆனால் அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. தற்போதைக்கு பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறேன்'' என்று கூறியுள்ளார்.