ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டில் தனக்கு என்று ஒரு தனியிடத்தை பிடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கஜோல். அஜய்யை திருமணம் செய்த பின்னர் நடிப்பை கைவிட்டார் கஜோல். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் ஷாரூக்கானின் ‛தில்வாலே'படத்தின் மூலம் பாலிவுட்டில் ரீ-என்ட்ரி ஆனார். ஆனால் இப்படம் கஜோலுக்கு தோல்வி படமாகவே அமைந்து.
சமீபத்தில் நடந்த அழகுசாதன பொருட்களின் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கஜோல், தன்னை தனது கணவர் அஜய் எப்போதாவது தான் பாராட்டுவார் என்று கூறினார். இதைப்பற்றி கஜோல் மேலும் கூறியதாவது..."மிகவும் அரிதாக தான் என் கணவர் அஜய், என்னைப்பற்றியும், என் அழகை பற்றியும் பாராட்டுவார். அப்படி அவர் பாராட்டும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் மிகவும் அழகாக இருத்தால் மட்டும் தான் அஜய் என்னை பாராட்டுவார். அப்போதும் கூட அவர் என்னை ‛நீ மிகவும் அழகாக இருக்கிறாய் 'என்று கூறிவிட்டு சென்றுவிடுவார், அவ்வளவுதான்" என்றார்.