ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமீபத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் நசீருதீன் ஷாவிடம், பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா அமைப்பினர் முழக்கமிட்டு வருவது பற்றி கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா அமைப்பை தாக்கும் வகையில் பேசினார். பேட்டியில் அவர், பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் பணியாற்றும் படங்கள் திரையிடப்படும் சினிமா அரங்குகளை இடித்து தள்ளுவோம் என இந்த வீரர்கள் அனைவரும் மிரட்டுகிறார்கள். உண்மையில் இவர்கள், பாலிவுட் படத் தயாரிப்பாளர்களுடன் மோதுவதை விட எல்லைக்கு சென்று பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு, அவர்களின் முகாம்களை அழிக்கலாம். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்த போது கூட நமது அரசு பாகிஸ்தான் உடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்ளவில்லை. அப்படி இருக்கையில் இவர்கள் மட்டும் ஏன் சினிமா நடிகர்களை குறிவைக்கிறார்கள்? என பேசி உள்ளார்.