ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பவாத்கான், மகிரா கான் உள்ளிட்ட பாகிஸ்தான் நடிகர் 48 மணிநேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா எச்சரித்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவின் யுரியில் நடத்திய கொடூர தாக்குதலில் 17 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மேலும் பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் நடிகர்கள், நடிகைகள் இன்னும் 48 மணி நேரங்களில் வெளியேற வேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி கெடு விதித்து உள்ளது. இல்லையென்றால் அவர்களை எம்என்எஸ்., கட்சியினர் வெளியேற்றுவார்கள் என்று அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
எம்என்எஸ்., கட்சியை போன்று மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ., கட்சியும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நடிகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக பவாத் கானுக்கும், மகிராவிற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கரண் ஜோகர் இயக்கத்தில் பவாத் நடித்துள்ள ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தில் பவாத் கான் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்க வேண்டும், அதேப்போன்று ரயீஸ் படத்தில் மகிரா காட்சியையும் நீக்க வேண்டும். இருவரின் காட்சிகளை நீக்காவிட்டால் படத்தை இங்கு திரையிடவிட மாட்டோம் என மகாராஷ்டிரா பாஜ.,வின் பொதுச்செயலாளர் சஞ்சய் உபதயா தெரிவித்துள்ளார்.