ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
‛ஆயிஷா' படத்தை இயக்கியவர் பெண் இயக்குநரான ராஜ்ஸ்ரீ ஓஜா. இவர் அடுத்தப்படியாக காஷ்மீரை பின்னணியாக கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் ஆலியா பட்டை நடிக்க வைக்க ராஜ்ஸ்ரீ முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவரிடமும் பேசி வருகிறார். கிட்டத்தட்ட ஆலியாவும் உறுதி சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் கதை காஷ்மீரை பின்னணியாக கொண்டு படமாக்கப்பட இருக்கிறது. இதில் காஷ்மீர் பெண்ணாக ஆலியா நடிக்க உள்ளார். அதிலும் காஷ்மீர் பெண்களின் இசைக்குழுவில் இருக்கும் பெண்ணாக ஆலியா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு முக்கிய ரோலில் நவாசுதீன் சித்திக்கும், ஷபானா ஆஸ்மியும் நடிக்க உள்ளார்கள். இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை ஆரம்பிக்க ராஜ்ஸ்ரீ திட்டமிட்டிருக்கிறார்.