ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தங்கை அர்பிதா வீட்டில், மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.3.25 லட்சம் என்று கூறப்படுகிறது. அர்பிதாவும் அவரது கணவர் ஆயுஷ் சர்மாவும், மும்பை பந்த்ராவில் வசித்து வருகின்றனர். விடுமுறை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அர்பிதாவும், ஆயுஷூம் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் நகையும் பணமும் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைத்தனர். இதையடுத்து அவர்கள் மும்பை பந்த்ரா போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அர்பிதா வீட்டில் வேலை பார்த்த ஆப்சா மீது போலீசார் சந்தேகின்றனர். ரூ. 2.25 லட்சம் ரொக்க பணமும், ரூ.1 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பொருட்களும் காணாமல் போய் இருப்பதாக கூறப்படுகிறது.