ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கல்யாணம் என்ற பேச்சை எடுத்தாலே, எரிந்து விழுகிறார் பிரியங்கா சோப்ரா. கோலிவுட் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமாகி, பாலிவுட்டில் பிரபலமாகி, ஹாலிவுட்டையும் இப்போது கலக்கி வருகிறார். ஆனாலும், அவரது முகத்தில் சோகத்தின் சுவடு தென்படுகிறது. 'எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள்; கல்யாணம் என்ற வார்த்தை மட்டும் வேண்டாம். சினிமாவில், நான் சாதிக்க வேண்டியது எவ்வளவோ உள்ளது. கல்யாணம் என்பதெல்லாம், மிகச் சாதாரணமான விஷயம்; அதைப் பற்றி பேசி, ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்' என, சீறுகிறார். 'பிரியங்கா, யாரையாவது காதலித்திருக்கலாம்; அந்த காதல் ஏமாற்றத்தில் முடிந்திருக்கலாம். அதனால் தான் இப்படி வெறுப்பாக பேசுகிறார்' என்கின்றன, பிரியங்காவுக்கு நெருக்கமான வட்டாரங்கள்.