ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் நடித்தவர் நடிகை யாமி கவுதம். தமிழ் தவிர தென்னிந்திய படங்கள் சிலவற்றிலும் நடித்திருப்பவர், இப்போது பாலிவுட்டிலும் பிரபலமாகியிருக்கிறார். இவருக்கும், நடிகர் புல்கிட் சாம்ராட்டிற்கும் காதல் மலர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் நெருக்கத்தால் புல்கிட்டின் மனைவி ஸ்வேதா ரோகிரா, அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், புல்கிட் தன் மனைவியுடன் தொடர்ந்து வாழ விருப்பமில்லை என்று தெரிகிறது. இதன்காரணமாக அவர் முறைப்படி விவாகரத்திற்கு மனு செய்யவுள்ளாராம். இதன் பின்னணியில் நடிகை யாமி கவுதம் இருப்பதாகவும், புல்கிட்டிடம், ஸ்வேதாவை முறைப்படி விவாகரத்து செய்யும்படி விலியுறுத்தியதாகவும் பாலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.