இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன் மகன்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஹிருத்திக் ரோஷன் தன் மகன்களுடன் துருக்கிற்கு சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா சென்றுவிட்டு நாடு திரும்ப, துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் வந்துள்ளார். ஆனால் அவர் பயணம் செய்ய இருந்த விமானத்தை தவறவிட விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது தான் அங்கு பயங்கரவாதிகள் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் ஹிருத்திக் மற்றும் அவரது மகன்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்திய திரும்பியுள்ள ஹிருத்திக் ரோஷன், தன் டுவிட்டர் பக்கத்தில் ‛‛நாடு திரும்ப தனக்கு உதவி செய்த விமானநிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும், பயங்கரவாத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.