ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். முன்னணி நடிகராக இருந்தபோதும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது சல்மானின் இயல்பாகிவிட்டது. சமீபத்தில் அவர் கூறிய கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது சல்மான், ‛சுல்தான்' படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று விட்டு வரும்போது, தான் கற்பழிக்கப்பட்ட பெண் போன்று உணர்ந்ததாக கூறினார். இது பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இந்த கருத்து தொடர்பாக சல்மான் கான் மீது நடிவடிக்கை கோரி இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோவை சேர்ந்த சமூகர் ஆர்வலர் ரப்தாத் ஜமால் என்பவர் லக்னோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேப்போன்று கான்பூரில் வக்கீல் ஒருவரும் கான்பூர் கோர்ட்டில் சல்மான் மீது வழக்குபதிவு செய்துள்ளார்.