ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்தியாவில் தயாராகும் பல படங்கள் தொடர்ந்து பாகிஸ்தானில் பல்வேறு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது கடந்த வெள்ளியன்று வெளியான கயா கூல் ஹெய்ன் ஹம் 3 படம் பாகிஸ்தானின் தணிக்கைக் குழுவால் ஆபாசமான திரைப்படமாக அங்கீகரிக்கப்பட்டு அந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தணிக்கைக்குழு அதிகாரியான மொபாஷிர் ஹாசன் கூறுகையில், “இந்த திரைப்படம் மிகவும் மோசமான ஆபாச காட்சிகளையும், நிர்வாண காட்சிகளையும் கொண்டுள்ளது. இது பொது மக்கள் பார்க்க முற்றிலும் தகாத படமாகும். ஆபாச வசனங்கள் மற்றும் ஆபாச காட்சிகள் கொட்டிக் கிடப்பதால் கயா குல் ஹெய்ன் ஹம் 3 திரைப்படத்தை பாகிஸ்தானில் தடை செய்கின்றோம்” என்று அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் வெளியானதைப் போலவே பாகிஸ்தானிலும் ஒரு சில திரையரங்கில் இத்திரைப்படம் வெளியானது. வெள்ளி மற்றும் சனிக்கிழமை படம் ஓடிய பின்னர் பலதரப்பட்ட மக்களின் எதிர்ப்பால் தணிக்கைக் குழு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துஷார் கபூர், அப்தப் ஷிவ்தாஷினி மற்றும் மந்தனா கரிமி நடிப்பில் வெளியாகியுள்ள ஹிந்தி திரைப்படம் பாலிவுட்டில் கணிசமான வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.