ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
பாலிவுட் ஆக்ஷன் சூப்பர்ஸ்டார் அக்ஷய் குமார் நடிப்பில் இந்த மாதம் 22ம் தேதி வெளிவர இருக்கும் படம் ஏர்லிஃப்ட். திரைப்படத்தை தணிக்கைச் செய்த தணிக்கையாளர்கள் படத்திற்கு எந்த 'கட்'டும் கொடுக்கவில்லை, பதிலுக்கு அதில் இருந்த மூத்த தணிக்கையாளர் எழுந்து வந்து அக்ஷய் குமாரை மனமார பாராட்டியுள்ளார். தேசபக்தியைச் சொல்லும் தரமான படமாக ஏர்லிஃப்ட் திரைப்படம் அமைந்துள்ளது. அவரின் இந்த செய்கையால், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளார்.
ஏர்லிஃப்ட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நாயகி நிம்ரத் கவுர் கலந்துக் கொண்டனர். அப்போது பேசிய அக்ஷய், தனது படமான ஏர்லிஃப்ட் படத்தில் எந்த ஒரு சிறு காட்சியும் வெட்டப்படவில்லை, அதற்கு மாறாக எனக்கு தணிக்கையாளர்களிடம் இருந்து பாராட்டுக் கிடைத்தது என்று தெரிவித்தார்.
இயக்குனர் ராஜமேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏர்லிஃப்ட் படம் 1990ல் இராக் போரின் போது குவைத்தில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 111,711 பேரை 59 நாட்கள் தொடர்ந்து போராடி இந்திய ராணுவ விமானம் காப்பாற்றியதும், அது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்ததும் தான் படத்தின் கதையம்சமாம். பாலிவுட்டே தற்போது இந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறது.