ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டில் விரைவில் வெளியாக இருக்கும் 'கட்டி பட்டி' என்கிற படத்தின் சிறப்பு காட்சியை சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு திரையிட்டு காட்டினார்கள். படம் பார்த்துவிட்டு வெளியேவந்த அமீர்கான் கண்களில் கண்ணீர்.. அந்த அளவுக்கு படம் அவரை பாதித்திருந்தது.. அதை அவர் மனம் திறந்து வெளியே சொல்லவும் செய்தார்.. ஆனால் உடனே சோஷியல் மீடியாவில் அவரது கருத்தை கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் அந்தப்படத்தின் கதாநாயகியாக நடித்த கங்கனா ரனாவத், அமீர்கான் அழுததில் வியப்பொன்றும் இல்லை என கூறியிருக்கிறார். காரணம் அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்த நாட்களில் ஷூட்டிங் முடிந்த தினம் பல இரவுகளில் அதில் நடித்த தானே பலமுறை கண்ணீர்விட்டு அழுததாகவும், தன் தாய் ஒவ்வொருமுறையும் தன்னை தேற்றி ஆசுவாசப்படுத்தியதாகவும் கூறியுள்ளார் கங்கனா. அந்த அளவுக்கு மனதை கரைக்கும் விதமான கதையாம் இந்தப்படத்தினுடையது..