ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டார் அக்ஷ்ய் குமார் நடிப்பில் இந்தவாரம் வெளியாக இருக்கும் படம் பிரதர்ஸ். ஹாலிவுட் படமான வாரியர்ஸ் படத்தின் ரீ-மேக் தான் இது. தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் அக்ஷ்ய். அவரிடத்தில் உங்கள் சுயசரிதையை டிவிங்கிளிடம் எழுத கொடுப்பீர்களா....? என்று கேட்டதற்கு, ''நிச்சயமாக நான் கொடுக்க மாட்டேன்''. ஏன் என்று கேட்டதற்கு..?, ''ஒருவரது சுயசரிதை எழுதுவதற்கு முன்பாக அவர் ஒரு லெஜெண்ட்டாக இருக்க வேண்டும். நிறைய சாதித்திருக்க வேண்டும், நான் சினிமாவில் 25 ஆண்டுகள் தான் நிறைவு செய்துள்ளேன். இந்த 25 ஆண்டுகளில் நான் அப்படி ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை. சுயசரிதை எழுதும் அளவுக்கு நான் உயரவில்லை. என்னை கேட்டால் அமிதாப்பச்சனின் சுயசரிதையை எழுதலாம். அவர் தான் பெரிய லெஜெண்ட். அவர் வாழ்க்கையில் எவ்வளவு சாதித்திருக்கிறார். ஆகையால் நான் எனது சுயசரிதை பற்றி சிந்திக்கவே இல்லை என்று கூறியுள்ளார் அக்ஷ்ய்.