கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
எந்திரன் படத்தை ரஜினி-ஐஸ்வர்யாராயை வைத்து இயக்கினார் ஷங்கர். ஹாலிவுட் தரத்தில் உருவான அப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது. அதையடுத்து விக்ரமை வைத்து ஐ படத்தையும் பிரமாண்டமாக இயக்கினார். இந்நிலையில், எந்திரன்-2 படத்தை இயக்கும் வேலைகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். தனது பிரமாண்டத்துக்குப்போட்டியாக வருவது போன்று ராஜமவுலியின் பாகுபலி ரூ. 250கோடியில் உருவாகியிருப்பதை அடுத்து, ஷங்கரின் எந்திரன்-2வும் ரூ. 250கோடியில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் பல முக்கிய மொழிகளிலும் அப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ள ஷங்கர், எந்திரன்-2விலும் ரஜினிதான் ஹீரோ என்பதை ஏற்கனவே முடிவு செய்துவிட்டார். ஆனால், வில்லனாக யாரை நடிக்க வைப்பது என்பதில்தான் ஆரம்பத்தில் இருந்தே குழப்பம் நீடித்து வருகிறது.