ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க தான் ஆவலாக இருப்பதாக, நடிகை ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார். ரெமோ டி சோஷா இயக்கத்தில், சமீபத்தில் வெளியான ஏபிசிடி 2 படத்தில், பிரபுதேவா உடன் இணைந்து ஸ்ரத்தா கபூர் நடித்திருந்தார். இப்படம் குறித்து ஸ்ரத்தா கபூர் கூறியதாவது, பிரபுதேவா சிறந்த நடிகர். அவர் ஒரு லெஜண்ட், அவரிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவருடன் இணைந்து நடித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே என் கனவு என்று ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார்.