ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கும் பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படமான பாகுபலி பல மொழிகளில் வெளியிட திட்டமிடுகிறார்கள். இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரன் ஜோகர் வாங்கி உள்ளார். அவர் பாகுபலி படத்தை பற்றி பெரிய அளவில் புகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி பாகுபலிக்கு பிறகு இயக்கபோகும் படம் பற்றி இப்போதே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் பாகுபலிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலிக்கு உலக அளவில் ஒரு அங்கீகாரம் கிடைக்குமென்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக அவருக்கு ஹாலிவுட் அல்லது பாலிவுட்டிலிருந்து வாய்ப்புகள் தேடி வரும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. அவர் முன்பு ஒரு சமயம் பாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான அமீர்கானை இயக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறி இருந்தார். அதனால் பாகுபலிக்கு பிறகு அவர் அமீர்கானை வைத்து இந்தி படம் இயக்க போகிறார் என்று கூறப்படுகிறது. அந்த படத்தை கரன் ஜோகர் தயாரிப்பார் என்று தெரிகிறது.