ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பரபரப்பாக சென்று கொண்டிருந்த ஸ்ருதியின் திரையுலக பயணம், திடீரென திருப்பத்தை சந்தித்துள்ளது. தெலுங்கு - தமிழ் மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட ஸ்ருதி, பின், கால்ஷீட் இல்லாததால், அதிலிருந்து விலகினார். இதனால், அவர் மீது ஐதராபாத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஸ்ருதியின் திரையுலக எதிர்காலம் என்ன ஆகுமோ? என, பலரும் கலங்கி போயிருக்க, ஸ்ருதியோ, சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல், உற்சாகமாக இருக்கிறார். சமீபத்தில், ஐதராபாத்தில் நடந்த, உத்தம வில்லன் படத்தின் விளம்பர நிகழ்ச்சி யில் பங்கேற்ற அவர், எந்த கவலையும் இன்றி, ஜாலி அரட்டை அடித்ததை பார்த்து, தெலுங்கு திரையுலகினர் ஆச்சரியப்படுகின்றனர்.