ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான கொலை வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2002ல் நடந்த விபத்துக்கு காரணமான காரை, சல்மான் ஓட்டவில்லை என்றும், அவரின் டிரைவர் அந்த காரை தானே ஓட்டியதாகவும், கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த, 2002ல், மும்பை நகர வீதியில் தாறுமாறாக ஓடிய பாலிவுட் நடிகர் சல்மான் கானின் கார், சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில், ஒருவர் பலியானார்; நான்கு பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரித்த மும்பை போலீசார், சல்மான் கான் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். கடந்த, 13 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று வரும் மும்பை கோர்ட்டில் ஆஜரான, சல்மான் கானின் கார் டிரைவர் அசோக், விபத்து நடந்த அன்று, அந்த காரை, சல்மான் கான் ஓட்டவில்லை என்றும், தானே அந்த காரை ஓட்டிச் சென்றதாகவும் தெரிவித்தார். இவ்வாறு கூறுவதற்காக, சல்மான் கான் தனக்கு பணம் கொடுக்கவில்லை எனவும், தான் யாராலும் மிரட்டப்படவில்லை என்றும் கூறினார். டிரைவர் அசோக்கின் வாக்குமூலத்தால், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.