ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
இலண்டனில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசியத்தில், பாலிவுட் நடிகை காத்ரீனா கைப்பிற்கு மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. மேடம் துசாட்ஸ் மியூசியம், தனது இணையதளத்தில், பிரபலங்களுக்கான போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் வெற்றி பெறுபவர்களது மெழுகுச்சிலை, மியூசியத்தில் வைக்கப்படுகிறது. காத்ரீனா கைப், பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனேவை தோற்கடித்து, சமீபத்தில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, அவரது மெழுகுச்சிலை தற்போது மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. காத்ரீனா கைப்பின் மெழுகுச்சிலை திறப்பு விழாவில், அவரின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அமிதாப் பச்சன், ஷாரூக் கான் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் பிரபலங்களுக்கு, இங்கு மெழுகுச்சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.