ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்தவர் கோவிந்தா. தற்போது கேரக்டர் ரோலில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில், இவரது நடிப்பில் வௌியான படங்கள் ''கில் தில்'' மற்றும் ''ஹேப்பி எண்டிங்''. இந்த இரண்டு படங்களிலும் கோவிந்தாவின் நடிப்பு பேசும்படியாக இருந்தது, ஆனால் படங்கள் தான் வெற்றி பெறவில்லை. ஆனாலும் தற்போது நிறைய படங்களில் நடிக்க கோவிந்தாவுக்கு வாய்ப்பு வருகிறதாம். ஆனால் தன்னிடம் வரும் தயாரிப்பாளர்களிடம் தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி கேட்கிறாராம். தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வி படங்களாக அமைந்துவிட்டன, ஆனாலும் சம்பளத்தை குறைக்க மறுக்கிறீர்களே என்று தயாரிப்பாளர்கள் கேட்டால், நான் நடித்த இரண்டு படத்திலும் எனது நடிப்பு சிறப்பாக தான் இருந்தது என்று எல்லோரும் கூறுகின்றனர், பிறகு ஏன் நான் எனது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்கிறாராம்.