ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அபிஷேக் செளபே இயக்கத்தில், உத்டா பஞ்சாப் என்ற படத்தில் நடிக்க ஷாகித் கபூர் ஒப்பந்தமானார். செளபே, இந்தாண்டு இறுதிக்குள்ளாக, படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ஷாகித்தின் தற்போதைய கால்ஷீட்டை பார்க்கும்போது, அடுத்த ஆண்டு இறுதி்க்குள் கூட, படப்பிடிப்பை துவக்க முடியாதது போல் தோன்றுகிறது. ஏனெனில், ஷாகித் கபூர், தற்போது ஷந்தார் படத்தின் படப்படிப்பிற்காக போலந்து சென்றுள்ளார். ஷந்தார் பட இயக்குனர் விகாஷ் பால், சூட்டிங்கை, ஒரே செட்டியூலேயே முடிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, ஈரோஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்-டி.கே இயக்கும் பார்சி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங், ஜனவரியில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. உத்டா பஞ்சாப் படத்தின் சூட்டிங்கை, பார்சி படத்தின் சூட்டிங்கிற்கு பிறகே நடத்த முடியும் என்ற இக்கட்டான நிலை, அபிஷேக் செளபேவிற்கு ஏற்பட்டுள்ளது. உத்டா பஞ்சாப் படத்தில், ஷாகித் கபூரை நடிக்க வைக்கலாமா? அல்லது வேறொரு நடிகரை நடிக்க வைக்கலாமா? என்ற சிந்தனையில், தற்போது செளபே மூழ்கியுள்ளார்.....