ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமீபத்தில் வெளியான ஹேப்பி நியூ இயர் படம் சூப்பர் ஹிட்டாகியிருப்பதுடன், வசூலையும் குவித்து வருவதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஷாரூக்கான். இந்த உற்சாகத்துடனேயே தனது 49வது பிறந்தநாளை பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடினார். சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஷாரூக், பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசினார்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர், நீங்கள் 24 வருடமாக சினிமாவில் நடித்து வருகிறீர்கள், ஆனால் இதுவரை போலீஸ் ரோலில் ஏன் நடிக்கவில்லை, உங்களது போட்டி நடிகர்கள் கூட பல படங்களில் நடித்துவிட்டனர், நீங்கள் கூட ராணுவ வீரர் ரோலில் கூட நடித்துவிட்டீர்கள் ஆனால் போலீஸ் ரோலில் மட்டும் ஏன் இன்னும் நடிக்கவில்லை என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஷாரூக்கான், உண்மைதான் நீங்கள் சொல்வது போல நான் ராணுவ வீரனாக நிறைய படங்களில் நடித்துவிட்டேன், ஆனால் போலீஸ் ரோலில் நடிக்கவில்லை, எனக்கும் இன்ஸ்பெக்டர் விஜய், சிங்கம் போன்ற ரோலில் நடிக்க ஆசை தான், ஆனால் யாரும் எனக்கு அப்படி ஒரு ரோல் தரவில்லை. மேலும் நான் நிறைய படங்களில் திருடனாக நடித்துவிட்டேன், ஒருவேளை என்னை பார்க்க திருடன் போல தோன்றுகிறதோ என்னவோ, அதனால் தான் எனது நண்பர்கள் யாரும் எனக்கு போலீஸ் வேடம் தர மறுக்கின்றனர். இனி வரும் காலங்களில் போலீஸ் ரோலில் நடிக்க அழைப்பு வந்தால் நடிக்கலாம், இருந்தாலும் ஹேப்பி நியூ இயர் படம் போன்று திருடனாக நடித்ததில் எனக்கு சந்தோஷம் தான் என்று கூறினார்.