விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பாலிவுட்டின் லெஜெண்ட் நடிகர் ரன்தீர் கபூர். நடிப்பில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை வகுத்தவர். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர். 67வயதாகும் ரன்தீர், இப்போதும் தனக்கெற்ற வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிகை ரேகாவுடன் நடித்துள்ள, ''சூப்பர் நானி'' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் ரன்தீர் கபூர், சூப்பர் நானி பற்றியும், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து என்ன சொல்கிறார் என்று நீங்களே பாருங்கள்...
ரேகா எனது நல்ல நண்பர்
என் சினிமா கேரியரில் சுமார் 20 படங்கள் ரேகாவுடன் நடித்துள்ளேன். எனக்கு பிடித்த நடிகைகளில் ரேகா முக்கியமானவர், அதுமட்டுமல்ல எனது நல்ல நண்பரும் கூட. நிறைய பேர் ரேகா, ரொம்ப மூடியான டைப் என்று கூறுகின்றனர், ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. அவர் ஒரு ஆச்சர்யம் கலந்த நடிகை. மீண்டும் அவருடன் இணைந்து நடித்து இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
தாத்தா வேடத்தில் நடிக்கிறேன்
நிறையபேர் என்னிடம் சூப்பர் நானி படத்தில் நீங்கள் என்ன வேடத்தில் நடிக்கிறீர்கள் என்று கேட்டுகின்றனர். சந்தேகமே வேண்டாம், 'சூப்பர் நானி' படத்தில் நான் தாத்தா வேடத்தில் நடிக்கிறேன், ரேகா பாட்டி வேடத்தில் நடிக்கிறார். இந்த வயதில் நாங்கள் ஹீரோ-ஹீரோயினாகவோ அல்லது ரொமான்ஸ் காட்சிகளிலோ நடிக்க முடியாது, அதனால் தாத்தா-பாட்டி வேடத்தில் நடிக்கின்றோம். நிச்சயம் சூப்பர் நானி படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும்.
நான் எப்போதும் மாறமாட்டேன்
வாழ்க்கை சிறப்பாக அமைய மாற்றம் அவசியமானது. நாங்கள் நடித்த காலத்தில் இருந்தது போன்று சினிமா இப்போது இல்லை. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு சினிமாவும் மாறிவிட்டது. இன்றைய புதிய தலைமுறையினருக்கு ஏற்ற வகையிலான படங்கள் வருகின்றன. இது சினிமாவுக்கு நல்ல விஷயம் தான். ஆனால் என்னை பொறுத்தவரை நான் இப்போது மட்டுமல்ல, எப்போதும் மாறமாட்டேன். நான் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பேன்.
ரேகாவுடன் பணியாற்றியது மறக்கமுடியாது
நான் ஏற்கனவே கூறியபடி அவருடன் சுமார் 20 படங்களில் நடித்துள்ளேன். அந்தக்காலக்கட்டத்தில் அவருடன் பணியாற்றி அனுபவங்கள் இப்போதும் என் கண்முன்னால் நிற்கிறது. எனக்குள் நானே அவ்வப்போது எனது பழைய நினைவுகளை நினைவுகூர்ந்து கொள்வேன். ரேகா ஒரு சிறந்த நடிகை. சினிமாவில் மட்டுமல்லாது, நிஜ வாழ்விலும் நாங்கள் நல்ல நண்பர்கள், நாங்கள் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வோம். அது இப்போதும் தொடர்கிறது. இப்போது கூட நாங்கள் காதல், ரொமான்ஸ் உள்ளிட்ட விஷயங்களை ஜாலியாக பேசிக்கொள்வோம்.
இன்றைய காலக்கட்ட படங்கள் பிடித்திருக்கிறது
இன்றைய சினிமாவில் நிறைய நல்ல நல்ல படங்கள் திரைக்கு வருகின்றன. எனக்கும் அந்த படங்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ், முன்னபாய் எம்பிபிஎஸ்., படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் ரிலீஸான எக் வில்லன் படம் என்னை மிகவும் கவர்ந்தது. அதில், ரித்தேஷ் தேஷ்முக்கின் நடிப்பு அருமையாக இருந்தது. அதேப்போல் விக்கி டோனர் படமும் நன்றாக இருந்தது, ஜான் ஆபிரஹாம் சிறப்பாக நடித்திருந்தார்.
எனக்கு ஏற்ற வேடங்களில் நடிப்பேன்
இந்த வயதில் நான் ஹீரோவாக நடிக்க முடியாது, பாட்டு பாட முடியாது, நடனமாட முடியாது. ஆனாலும் நான் இன்றைய தலைமுறை நடிகர்களுடன் நடிக்க தயாராக இருக்கிறேன். ''சூப்பர் நானி'' படத்தில் சர்மான் ஜோஷியுடன் நடித்துள்ளேன், மிகவும் திறமையான நடிகர். எதிர்காலத்தில், சைப் அலிகான் உள்ளிட்ட இன்றைய முன்னணி ஸ்டார்களுடன் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அப்படி நான் நடிக்கும் வேடங்கள் எனக்கு பிடித்து இருக்க வேண்டும், அந்த வேடங்கள் எல்லாம், எனக்கு ஏற்ற வகையில் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நான் நடிப்பேன்.
இவ்வாறு ரன்தீர் கபூர் கூறினார்.