ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் வாரிசு அபிஷேக் பச்சன். நடிகரான இவர் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் தயாரித்த பா படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது படங்களில் நடித்தும், படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் தான் படம் தயாரிப்பதை வெறுப்பதாக கூறுகிறார் அபிஷேக். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பா படத்தில் தயாரிப்பாளராக கிடைத்தது அதிர்ஷ்டம் தான். எனக்கு படங்கள் தயாரிக்க பிடிக்கவில்லை, படம் தயாரிப்பதை நான் வெறுக்கிறேன். பா படத்தில் நடிக்கவும் செய்து தயாரிக்கவும் செய்தேன். ஒரேநேரத்தில் இரண்டு வேலைகளை பார்ப்பது சற்று கடினம். நடிக்காமல் படம் தயாரிப்பது பிடித்து இருக்கிறது. தற்போது நான், எனது அப்பா அமிதாப் மற்றும் தனுஷ் வைத்து, பால்கி இயக்கத்தில், ''ஷமிதாப்'' என்ற படத்தை தயாரித்து வருகிறேன். இந்தப்படத்தில் நான் தயாரிப்பாளர் மட்டும் தான். படம் தயாரிப்பது என்பது மிகவும் கஷ்டமான வேலை என்று கூறியுள்ளார்.