ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மும்பையில் பிரபல மாடலாக திகழ்ந்தவர் அர்ச்சனா பாண்டே. சில இந்தி படங்களிலும் இவர் நடித்திருக்கிறாராம். மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள லோக்கண்ட்வாலா ஏரியாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தான் மட்டும் தனித்து வசித்து வந்தாராம் அர்ச்சனா பாண்டே.
இந்தநிலையில், கடந்த சில தினங்களாக அவரது வீடு பூட்டியே இருந்ததோடு, வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதாம். அதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது யாருமே கதவை திறக்கவில்லையாம். அதனால் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
அதையடுத்து, போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது அர்ச்சனா பாண்டே பிணமாக கிடந்திருக்கிறார். அவரது உடலை மும்பையிலுள்ள கூப்பர் ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்று பரிசோதனை செய்தபோது அவர் செப்டம்பர் 29ந்தேதியே இறந்து விட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தார்களாம்.
இதையடுத்து, அர்ச்சனா பாண்டேயின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரணையில் இறங்கிய போலீசார், அர்சசனா ஒரு செல்நம்பருக்கு அடிக்கடி பேசியிருப்பதை அறிந்து அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள் அப்போதுதான் அந்த நபர் அர்ச்சனா பாண்டேயின் காதலர் என்கிற விவரம் கிடைத்திருக்கிறது. அதோடு அவர்களுக்கிடையே பிரச்சினை இருந்து வந்ததும், காதல் தோல்வியால்தான் அர்ச்சனா பாண்டே தற்கொலை செய்திருக்கிறார் என்ற விவரமும் போலீசாருக்கு தெரியவந்திருக்கிறது.
அதனால், அவர்களின் காதல் தோல்விக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்களாம்.