ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் நவம்பரில் வெளியாக இருக்கும் படம் பேங் பேங். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இப்படம். இந்நிலையில் இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக ஹிருத்திக், மொகஞ்சதரோ படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் சுமார் ரூ.50 கோடியாம். அப்படி அவருக்கு ரூ.50 கோடி கொடுக்கும் பட்சத்தில், இந்தியில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஹிருத்திக் ரோஷனும் இணைந்து விடுவார். ஏற்கனவே இந்தப்பட்டியலில் ஷாரூக், அமீர், சல்மான் ஆகியோர் உள்ளனர்.
இதுப்பற்றி ஹிருத்திக் ரோஷனிடம் கேட்டால், என் படத்தின் லாபங்களை பொறுத்து நான் சம்பளம் நிர்ணயிக்கிறேன், அது எனது தொழில் சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார்.
இதனிடையே பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர், சல்மான் கான் மற்றும் அமீர் கானுக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் தர முன்வந்துள்ளது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் கரண் ஜோகர். ஆனால் இதுப்பற்றி அமீரும், சல்மானும் வாய்திறக்காமல் அமைதியாக இருக்கின்றனர்.