விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பவர்களில் அர்ஜூன் கபூரும் ஒருவர். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மகனான இவர், இந்தியில் 4 படங்களில் இதுவரை நடித்திருக்கிறார். அதில் 2 ஸ்டேட்ஸ் அவருக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது. அதையடுத்து இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அதில் ஒன்றுதான் தேவார்.
இந்த படத்தில் ஸ்ரீதேவியின் சிபாரிசின் பேரில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடியுள்ளார் ஸ்ருதிஹாசன். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றபோது, அர்ஜூன்கபூர், ஸ்ருதி இருவரையும் சுற்றி பல குதிரைகளை நிறுத்தி படமாக்கியிருக்கிறார்கள். ஆனால், ஒரு குதிரையின் அருகே நின்றபடி ஸ்ருதிஹாசன் நடனமாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அந்த குதிரை தனது காலால் மீண்டும் மீண்டும் எட்டி உதைத்திருக்கிறது.
ஆனால் அதை கவனிக்காமல் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார் ஸ்ருதி. அவருடன் ஆடிய அர்ஜூன்கபூர் அதை கண்டதும், உடனடியாக பாய்ந்து சென்று ஸ்ருதிஹாசனை குதிரை மிதிக்காத வகையில் வெளியே இழுத்து வந்திருக்கிறார். இதனால் அந்த குதிரையிடம் உதை படாமல் தப்பியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இதையடுத்து, தன்னை குதிரை தாக்குதலில் இருந்து காப்பாற்றிய ரியல் ஹீரோவான அர்ஜூன்கபூருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.