ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஓமங் குமார் இயக்கத்தில், பிரியங்கா சோப்ரா நாயகியாக நடித்துள்ள 'மேரி கோம்' திரைப்படம் மணிப்பூர் மாநிலத்தில் வெளியாகுமா என்பது சர்ச்சைக்குரிய விஷயமாக ஆரம்பித்துள்ளது. ஒலிம்பிக்கில் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வாங்கிக் கொடுத்த மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மேரி கோம் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் 'மேரி கோம்'.
ஆனால், மணிப்பூர் மாநிலத்தில் 2000வது ஆண்டிலிருந்து எந்த ஒரு ஹிந்திப் படங்களும் வெளியாகவில்லை. அதோடு, ஹிந்தி மொழியை அவர்கள் பயன்படுத்துவதுமில்லை. புரட்சிகர மக்கள் முன்னணி என்ற அமைப்பு ஹிந்திப் படங்கள் வெளியாவதற்கும், ஹிந்தி மொழியை பயன்படுத்துவதற்கும் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து அங்கு திரைப்படங்களோ, ஹிந்தித் தொலைக்காட்சிகளோ காட்டப்படுவதில்லை.
அதனால், மேரி கோம் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் 'மேரி கோம்' திரைப்படம் மணிப்பூரில் வெளியாவதற்கு வாய்ப்பில்லை என்றே பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பிரியங்கா சோப்ரா அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் பேச்சு எழுந்துள்ளதாம். வட கிழக்கு மாநிலத் தோற்றம் கொண்ட யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்களாம்.
பிரியங்கா சோப்ரா, மேரி கோம் தோற்றத்துடன் ஒப்பிட முடியாதவராக இருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்து, சிறப்பாக நடித்திருக்கிறாராம். முக ஒற்றுமையை கருத்தில் கொள்ளாமல் அவரை ஒரு குத்துச் சண்டை வீரராக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் படம் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். அடுத்த மாதம் வெளிவர உள்ள 'மேரி கோம்' இந்தியத் திரையுலகில் ஒரு மைல் கல்லாக இருக்க வாய்ப்புண்டு...!