ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களான ஆமீர் கான், சல்மான் கான் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளார்களாம். இந்த படத்தை பிரபல இயக்குனரான ராஜ்குமார் சந்தோஷி இயக்க உள்ளார். 1994ம் ஆண்டு வெளிவந்த 'அந்தாஸ் அப்னா அப்னா' படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்து நடிக்க இருவரும் ஆர்வமாக உள்ளனர் என்ற செய்தியை ராஜ்குமார் சந்தோஷி வெளியிட்டுள்ளார். அந்த படம் வெளிவந்த போது மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் பின்னர் அந்தப் படம் வெகுவாக பேசப்பட்டது.
“அந்த காலகட்டத்தில் அவர்கள் இருவரும் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்ததால் அந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். ஆனால், இப்போது இருவருமே சூப்பர் ஸ்டார்களாக இருக்கிறார்கள். அவர்களை சேர்த்து வைத்து நடிக்க வைப்பது சாதாரண விஷயமில்லை. அவர்கள் இருவருக்குமே இந்த இரண்டாம் பாகத்தில் இணைந்து நடிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது. படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்ததும் அவர்களுடன் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.
படத்தை மிகவும் நகைச்சுவையாக உருவாக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இனி, நான்தான் உழைக்க வேண்டும்,” என்று ராஜ்குமார் சந்தோஷி தெரிவித்துள்ளார்.
'அந்தாஸ் அப்னா அப்னா' வெளிவந்த போது மிகப் பெரிய வசூலைப் பெறவில்லை என்றாலும், ஆமீர் கான், சல்மான் கான் ஆகியோர் நடித்த படங்களில் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இந்த படத்தின் நகைச்சுவைக் காட்சிகளை இன்றளவும் ரசிகர்கள் அதிகமா ரசித்துப் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சல்மானும், ஆமீரும் மீண்டும் இணைந்து நடித்தால் அது புதிய சகாப்தத்தை உருவாக்கும் என பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.