மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் நடிப்பதை தவிர்த்த ஐஸ்வர்யாராய், ஆரத்யாவை பெற்றுக்கொண்டவர் இப்போது அவர் ஓரளவு வளர்ந்து விட்டதால், ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொண்டு மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி விட்டார்.
ஏற்கனவே பல படவாய்ப்புகள் முற்றுகையிட்டபோது தனது உடல் பருமன் காரணமாகவே அப்படங்களில் நடிக்க மறுத்து வந்த ஐஸ்வர்யாராய், இப்போது தனது உடல்கட்டு மீண்டும் பழைய ஐஸ்வர்யாராயாட்டம் ஸ்லிம்மாகி விட்டதால், மீண்டும் நான் சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி விட்டதாக தனது அபிமான டைரக்டர்கள் சிலருக்கு சமீபத்தில் தகவல் அனுப்பினாராம்.
அதையடுத்து, முதல் நபராக ஐஸ்வர்யாராயை 1997ல் இருவர் படம் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தவரான மணிரத்னம், தான் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு ஐஸ்வர்யாராயை புக் பண்ணியுள்ளார். இந்த தகவலை சமீபத்தில் ஐஸ்வர்யாராயே உறுதிபடுத்தி விட்டார். அதோடு, இன்னும் சில இந்தி படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டுள்ளாராம் ஐஸ்வர்யாராய்.
மேலும், குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்பு நடித்ததை போல இந்த படங்களிலும் யூத் கெட்டப்பிலேயே நடிக்கும் ஐஸ்வர்யாராய், பர்பாமென்ஸ் மட்டுமின்றி கிளாமர் விசயத்திலும் எந்தவித தங்குதடையுமின்றி முன்பு நடித்தது போலவே களமிறங்கப்போகிறாராம். ஆக, ஐஸ்வர்யாராயின் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் படு அமர்க்களமாக இருக்கும் என்று பாலிவுட்டில் பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.