ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபல பாலிவுட் ஹீரோயின் அனுஷ்கா சர்மா, இப்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். என்.எச் 10 என்ற படத்தை தயாரித்து நவ்தீப் சிங்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அருகே உள்ள பாலைவனத்தில் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு வீசிய கடும் பாலைவன புயலால் பலபேர் இறந்தனர். இந்த புயலில் அனுஷ்கா சர்மாவின் பட யூனிட்டும் மாட்டிக் கொண்டது.
மணல் புயல் வீச ஆரம்பித்ததுமே அனுஷ்கா சர்மாவையும், நவ்தீப் சிங்கையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்து விட்டு கேமரா உள்ளிட்ட முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். மணல் புயலால் பாடல் காட்சிக்காக போடப்பட்டிருந்த செட்டுகள் அனைத்தும் வீணானது. இதனால் பல லட்சம் நஷ்டம் அடைந்தோடு படப்பிடிப்பும் நின்று விட்டது.
"படப்பிடிப்புக்கு போட்டிருந்த அனைத்து செட்டுகளும் சேதமைடைந்து விட்டது. பல லட்சம் ரூபாய் எனக்கு நஷ்டம்தான். ஆனால் யாருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது ஆறுதலாக இருக்கிறது. அந்த நாளை மறக்க முடியாது. காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி" என்ற தனது டுவிட்டரில் எழுதியிருக்கிறார் அனுஷ்கா சர்மா.