கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
இந்திய சினிமாவின் நூற்றாண்டையொட்டி மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சினிமா அருங்காட்சியகம் ஒன்றை கட்ட முடிவு செய்தது. தெற்கு மும்பையில் உள்ள குஷ்சன் மஹால் வளாகத்தில் இதற்கான பணிகள் துவங்கியது. சுமார் 6 ஆயிரம் சதுர அடியில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் மவுன படங்கள், பேசும் படங்கள், வண்ணப் படங்கள், நவீன படங்கள் என நான்கு பிரிவின் கிழ் தகவல்களும், பொருட்களும், சேகரிக்கப்பட்டு பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1050 திரைப்படங்களும், சுமார் ஒரு லட்சம் புகைப்படங்களும் இந்த அருங்காட்சியத்தில் வைக்கப்பட இருக்கிறது. இதையொட்டி கட்டப்படும் திரையரங்கில் பாதுகாக்கப்படும் திரைப்படங்கள் திரையிடப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆரம்பகால கேமரா உள்ளிட்ட உபரகரணங்கள், புகழ்பெற்ற படங்களில் இடம்பெற்ற செட்டுகள் போன்றவையும் கண்காட்சியில் இடம் பெறுகிறது.
இந்த அருங்காட்சி அமைப்பு பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த மாதம் அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளதாக தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார்