துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
வெங்கட் ஜனா இயக்கத்தில் ரஞ்சித், மெகாலி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛இறுதிமுயற்சி'. அக்டோபர் 10ல் ரிலீசாகிறது. தொழிலதிபரான ரஞ்சித், வியாபார நெருக்கடி காரணமாக ஒருவரிடம் 80 லட்சம் கடன் வாங்குகிறார். அவரோ கந்து வட்டி பார்ட்டி. கடன், வட்டியை திருப்பி தராதவர்களை டார்ச்சர் செய்கிறார். அந்த வில்லன் பிடியில் ரஞ்சித்தும், அவர் குடும்பமும் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பது கதை. அப்போது இக்கட்டான சூழலில் ஒரு முகம் தெரியாத கேரக்டர் ரஞ்சித் குடும்பத்துக்கு உதவுகிறது. ரஞ்சித், அவர் மனைவி, 2 குழந்தைகளை காப்பாற்றுகிறது. அந்த கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்து இருக்கிறார் விஜய்சேதுபதி.
இது குறித்து ரஞ்சித் கூறுகையில், ‛‛எனக்கும் விஜய்சேதுபதிக்கும் அதிகம் நட்பு இல்லை. ஆனாலும், கதை சொல்லி, வாய்ஸ் ஓவர் தரமுடியுமா என்று கேட்டோம். அவரோ மும்பையில் பிஸியாக இருந்தார். ஆனாலும், ஒரு நாள் அவரே சொந்த செலவில் பிளைட்டில் சென்னை வந்து, ஒரு சின்ன டப்பிங் தியேட்டரில் அந்த கேரக்டருக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்தார். ஒரு பைசா பணம் வாங்கவில்லை. அவரின் செயல் நெகிழ்ச்சியை தந்தது. கடனால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உதவும், அவர்களுக்கு ஆறுதலாக பேசும் விஜய்சேதுபதியின் வாய்ஸ் படத்துக்கும் பெரிதும் உதவியது. படம் பார்ப்பவர்கள் அந்த வாய்ஸை பாராட்டுவார்கள்'' என்றார்.