அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
1980 - 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரூபினி, ரஜினியுடன் 'மனிதன், ராஜா சின்ன ரோஜா' போன்ற படங்களில் நடித்தவர், கமலுடன் 'அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன்' மற்றும் விஜயகாந்துடன் 'புலன் விசாரணை' என பல ஹிட் படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்வதற்கு, அங்குள்ள விடுதியில் தங்குவதற்கு என சரவணன் என்ற நபர் ரூபினிடத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார். ஆனால் அதையடுத்து திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்கு எந்த ஏற்பாடும் செய்யாத அந்த நபர் திடீரென்று தலைமறைவாகி விட்டாராம். இதை அடுத்து தன்னை சரவணன் என்ற அந்த நபர் தன்னை மோசடி செய்துவிட்டதை அறிந்த ரூபினி, கடவுளின் பெயரை சொல்லி மோசடி செய்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.