மாமன் பட டிரைலர் : ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஏற்பட்ட பயம் | பாலிவுட்டில் கூடுதல் கவனம் செலுத்தும் ஸ்ரீலீலா | ஆபரேஷன் சிந்தூர் - பிரபலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த பவன் கல்யாண் | கவுதம் மேனன் இயக்கத்தில் சந்தானம்? | ரெட்ரோ படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் பற்றிய அப்டேட் | படக்குழுவுக்கு இரண்டாவது முறையாக பிரேக் கொடுத்த ராஜமவுலி | தயாரிப்பாளராக உருவெடுத்தது ஏன்? : சமந்தா வெளியிட்ட தகவல | 6 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் கோவை சரளா | மும்பையில் அமீர்கானை சந்தித்த அல்லு அர்ஜுன் | 'ஆபரேஷன் சிந்தூர்' : சினிமா பிரபலங்கள் வாழ்த்தும், பாராட்டும் |
விஜய்யுடன் நடித்த 'கோட்' படத்திற்கு பிறகு தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது மகன் ரிஷி ராகவேந்தருடனான கான்சர்ட் ஒன்றில் நடனமாடிய வீடியோவை வெளியிட்டிருந்த பிரபுதேவா, விரைவில் தனது மகனை சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்யப் போகிறார்.
இந்த நிலையில் நேற்று திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு தனது மனைவி, குழந்தையுடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் பிரபுதேவா. அப்போது அங்கு கூடிய ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று உள்ளார் பிரபுதேவா. அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.