'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய்யுடன் நடித்த 'கோட்' படத்திற்கு பிறகு தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது மகன் ரிஷி ராகவேந்தருடனான கான்சர்ட் ஒன்றில் நடனமாடிய வீடியோவை வெளியிட்டிருந்த பிரபுதேவா, விரைவில் தனது மகனை சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்யப் போகிறார்.
இந்த நிலையில் நேற்று திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு தனது மனைவி, குழந்தையுடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் பிரபுதேவா. அப்போது அங்கு கூடிய ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று உள்ளார் பிரபுதேவா. அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.