'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், சபீர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் 'சார்பட்டா பரம்பரை'. வட சென்னை கதைக்களத்தில் குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் கொரோனா காலகட்டத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை பா.ரஞ்சித்தும், ஆர்யாவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கப்பட்டது.
இந்த படத்தை 80 கோடி பட்ஜெட்டில் நீலம் புரொடக்சனுடன் சேர்ந்து மூன்று நிறுவனங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதில், ஜீ நிறுவனம் தற்போது விலகி விட்டதாம். அதன் காரணமாகவே புதிய தயாரிப்பு நிறுவனத்திற்காக காத்திருக்கிறாராம் பா.ரஞ்சித். இப்படி இந்த படம் ஆரம்பகட்ட பணிகளோடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் சார்பட்டா பரம்பரை-2 படம் கைவிடப்பட்டதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது.