மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான திலீப் நேற்று சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவர் விதிமுறைகளுக்கு மாறாக போலீஸ் பாதுகாப்புடன் சென்றதுடன் அரிவராசனம் பாடல் முடியும் வரை அவர் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இது நேற்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் பந்தாவாக எப்படி சாமி தரிசனம் செய்தார். எதனால் அவருக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது. ஐயப்பனுக்கு முன் அனைவரும் சமம் என்பதே சபரிமலை கோட்பாடு, அதை மீறியது எப்படி என்று கேள்வி எழுப்பினர்.
இச்சம்பவம் குறித்து நேற்று கேரள உயர்நீதிமன்றத்தின் தேவஸ்தான சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் திலீப் சன்னிதானத்திற்கு வந்தது எப்படி? என கேள்வி எழுப்பிய சிறப்பு அமர்வு நீதிபதிகள், அரிவராசனம் பாடல் முடியும் வரை நடிகர் திலீப்பிற்கு சன்னிதானத்தில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி கிடைத்தது எப்படி? என்ற கேள்வியையும் எழுப்பினர்.
சம்பவம் குறித்து தேவஸ்தான ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக தேவஸ்தானம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேவசம் போர்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.