திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஊர்வசி ரத்தேலா. தமிழில் 'த லெஜன்ட்' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வந்த 'டாகு மகாராஜ்' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
ஊர்வசி நேற்று அவருடைய 32வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அதற்காக வைரத்தால் ஆன ஆடையை அணிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீளமான கவுன் ஒன்றில் வைரங்களும், கண்ணாடிகளும் பதிக்கப்பட்டதாக அந்த ஆடை உள்ளது.
“நீங்கள் அனைவரும் என்னுடன் இருந்து பரிசுகள், வாழ்த்துகளைத் தந்ததற்கும், அன்பைப் பொழிந்ததற்கும் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது, என் மனதில் இருந்து நன்றி,” என நன்றி தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் எப்படிப்பட்ட பேஷனான ஆடைகள் அணிவது என்பது நடிகைகளுக்குள் இருக்கும் முக்கியமான ஒரு போட்டி. ஊர்வசியின் இந்த வைர ஆடை, பேஷன் ஆர்வலர்கள் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.