லூசிபர் எழுப்பிய கேள்விகளுக்கு எம்புரான் விடை சொல்லும் : பிரித்விராஜ் | 'கூலி' 1000 கோடி வசூலிக்கும் : சந்தீப் கிஷன் | கரண் ஜோஹர் தயாரிப்பில் படம் இயக்கும் மார்கோ இயக்குனர் | எம்புரான் ரிலீஸை தடுக்க தயாரிப்பாளர் சங்கம் முயற்சி : எதிர்ப்புக்கு பணிந்த தயாரிப்பாளர் | திறப்பு விழாவிற்கு வந்து ரிப்பனை வெட்டாமல் குனிந்து செல்ல முயன்ற நடிகர் | ராஜமவுலி 'டார்ச்சர்' செய்வதாக முன்னாள் நண்பர் குற்றச்சாட்டு | ஷங்கரை மீட்டு எடுக்க உருவாகுமா 'வேள்பாரி'? | 'ரெட்ரோ' தெலுங்கு உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம் | ஓடிடியில் வரவேற்பைப் பெறுமா 'விடாமுயற்சி' | ஜிவி பிரகாஷை புறக்கணிக்கிறதா 'குட் பேட் அக்லி' குழு |
பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஊர்வசி ரத்தேலா. தமிழில் 'த லெஜன்ட்' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வந்த 'டாகு மகாராஜ்' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
ஊர்வசி நேற்று அவருடைய 32வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அதற்காக வைரத்தால் ஆன ஆடையை அணிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீளமான கவுன் ஒன்றில் வைரங்களும், கண்ணாடிகளும் பதிக்கப்பட்டதாக அந்த ஆடை உள்ளது.
“நீங்கள் அனைவரும் என்னுடன் இருந்து பரிசுகள், வாழ்த்துகளைத் தந்ததற்கும், அன்பைப் பொழிந்ததற்கும் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது, என் மனதில் இருந்து நன்றி,” என நன்றி தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் எப்படிப்பட்ட பேஷனான ஆடைகள் அணிவது என்பது நடிகைகளுக்குள் இருக்கும் முக்கியமான ஒரு போட்டி. ஊர்வசியின் இந்த வைர ஆடை, பேஷன் ஆர்வலர்கள் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.