மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது. முன்னணி வீரரான விராட் கோலி ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் அடித்தார். அவரது ஆட்டத்தை பாகிஸ்தான் ரசிகர்களும் ரசித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
பாகிஸ்தான் நடிகையான மாயா அலி என்பவர் விராட் கோலி சதமடித்த வீடியோவைப் பகிர்ந்து, “அவருக்கு மிகப் பெரிய மரியாதை… ராஜா என்பதற்கான காரணம்”, எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் ஆட்டத்திற்கு பாகிஸ்தான் நாட்டில் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள நடிகை ஒருவர் விராட்டைப் புகழ்ந்து பதிவிட்டது இந்திய ரசிகர்களாலும் பகிரப்பட்டு வருகிறது.