போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

கடந்த சில மாதங்களாகவே மலையாள திரை உலகில் வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்கள் கூட 100 கோடி, 200 கோடி என மிக பெரிய வசூல் இலக்கை தொட்டு சாதனை படைத்து வருகின்றன. இந்த சமயத்தில் தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்விராஜ் நடிப்பில் உருவான ஆடுஜீவிதம் திரைப்படமும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வெளியானது. பிளஸ்சி இயக்கத்தில் பென்யமின் என்பவர் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அரபு நாட்டிற்கு ஆடு மேய்க்க சென்ற கேரள இளைஞன் பட்ட துன்பங்களை மையப்படுத்தி உண்மை சம்பவத்தின் பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது.
கலகலப்பான பிரேமலு, விறுவிறுப்பான மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகிய படங்கள் போல அல்லாமல் இந்த படம் கொஞ்சம் சீரியஸான கதை அம்சத்துடன் உருவாகி இருந்தது. ஆனாலும் இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் அதே போன்ற வரவேற்பை முதல் நாளிலிருந்தே கொடுத்து வருகின்றனர். தற்போது படம் வெளியாகி 25 நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் சேர்த்து 150 கோடி இந்தப் படம் வசூலித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நடிகர் பிரித்விராஜ் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.