கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் 'மின்சார கனவு, விஐபி 2' தமிழ்ப் படங்களில் நடித்தவர் கஜோல். அவருக்கு ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனுடன் திருமணம் நடந்து டீன் ஏஜ் வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். தற்போதும் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மட்டும் 'மார்பிங்' செய்து 'ஏஐ' தொழில்நுட்பம் மூலம், வேறு ஒருவரது ஆபாசமான வீடியோவைப் பகிர்ந்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அது குறித்து பல சினிமா பிரபலங்களும் கண்டனங்களைத் தெரிவித்தனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை கஜோலின் வீடியோ ஒன்றை அது போல மார்பிங், ஏஐ செய்து வெளியிட்டுள்ளனர். மூன்று மாதம் முன்பு வெளியான அந்த போலி ஆபாச வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மற்றொரு பாலிவுட் நடிகையான கத்ரினா கைப் வீடியோவும் இது போல வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.